(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
தபால்சேவை ஊழியர்களின் தொடர் போராட்டத்தை நோக்கும்போது இப் போராட்டம் அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது என தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் எம்.எச்.ஏ ஹலீம் சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று வாய்மூல விடைக்கான கேள்வி நேரத்தின் போது கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகபெரும தபால் ஊழியர்கள் போராட்டம் தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அமைச்சர் ஹலீம் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தபால் சேவைக்கான தனி யாப்பு அவசியம் என்றும் தபால் சேவைக்கு மூன்றாம் நிலை சேவை தரத்தை நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து தபால் சேவை ஊழியர்கள் பணிப்பகிஷ்கரிப்பினை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த கோரிக்கையானது ஏனைய அரச சேவைகளுடன் தொடர்புப்பட்டிருப்பதனால் பிற தொழிற்சங்கங்களுடனும் நாம் கலந்தாலோசிக்க வேண்டும். இதன் காரணமாக தீர்மானம் எடுப்பதில் தாமதம் ஏற்பட்டது. அதன்படி இந்த இரு கோரிக்கைகளையும் அமைச்சரவையில் ஆராய்ந்து சாதகமான பதிலை தொழிற்சங்கங்களுக்கு தற்போது வழங்கியுள்ளோம்.
எனினும் தபால்சேவை ஊழியர்கள் தொடர்ந்தும் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதனை நோக்கும்போது இவர்களது தொடர் போராட்டம் அரசாங்கத்தை கவிழ்க்கும் சதி திட்டமாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM