உலக யோகா தினத்தை முன்னிட்டு, ராஜஸ்தானில் நடந்த யோகா நிகழ்ச்சியில் சுமார் 1.05 இலட்சம் பேர் இணைந்து யோகா செய்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர்.
2015ஆம் ஆண்டு முதல் ஜூன் 21ஆம் திகதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 4ஆவது வருடமாக இன்று உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒருபகுதியாக, ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் இன்று அம்மாநில முதல் அமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியாவும், யோகா பயிற்சியாளாரான ராம்தேவ் பங்கேற்கும் யோகா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
மிக பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் சுமார் 1.05 இலட்சம் பேர் கலந்து கொண்டு யோகா பயிற்சி மேற்கொண்டனர்.
ஒரே நேரத்தில் அதிகம் பேர் ஒன்றிணைந்து யோகா பயிற்சி மேற்கொண்டு இந்த நிகழ்ச்சி கின்னஸ் சாதனை படைத்துள்ளது. இதற்கான சான்றிதழ் மேடையில் வழங்கப்பட்டது.
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பல்வேறு மாநிலங்களிலும், நகரங்களிலும் இன்று யோகா பயிற்சியும், யோகா குறித்த விழிப்புணர்வு பிரச்சாரங்களும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM