(எம்.நியூட்டன்)
வலி வடக்கில் விமான நிலையம் துறைமுகம் பகுதிகளை தவிர 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பகுதி இராணுவத்தினர் வசமுள்ளதாக வலி.வடக்கு பிரதேச சபை தவிசாளர் எஸ்.சுகிர்தன் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்
வலிகாமம் வடக்கில் 6 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பகுதியானது உயர் பாதுகாப்பு வலையமாக இருந்ததது தற்போது 3 ஆயிரத்து 300 ஏக்கர் நிலப்பகுதி விடுவிக்கப்பட்டதுள்ளது. ஏஞ்சிய 3 ஆயிரம் ஏக்கர் காணியில் குறிப்பிட்டளவு பலாலி விமான நிலைத்திற்கும் , காங்கேசன் துறை துறைமுகத்திற்குமான நிலப்பகுதிகளை விட 2 ஆயிரத்து 500 ஏக்கர் நிலப்பகுதிகள் விடுவிக்கப்படவேண்டியுள்ளது.
வலிகாம் வடக்கில் மூன்று கிராம சேவகர் பிரிவுகள் இன்னமும் முழுமையாக விடுவிக்கப்படாது.ள்ளது. குறிப்பாக மயிலிட்டித்துறை வடக்கு, பலாலி மேற்கு, பலாலி வடமேற்கு, ஆகிய கிராம சேவையாளர்கள் பிரிவுகளே முழுமையாக விடுவிக்கப்படாதுள்ளது. . இதேவேளை 18 கிராம அலுவலர் பிரிவுகள் பகுதி அளவில் விடுவிக்கப்படவேண்டியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் காங்கேசன் துறையில் 515 ஆவது பிரிகேட் தலைமையகம் விடுவிக்கப்படுமேயானால் காங்கேசன் துறை நகர் முழுமையாக விடுவிக்கப்பட்டு விடும். இவ்வாறு விடுவிக்கப்படுமானால் மக்கள் மீள் குடியேற்றப்பட்டு நிலைபேறான அபிவிருத்தியை காங்கேசன் துறை நகர் அடைந்து விடுமென அவர் மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM