(க.கிஷாந்தன்)
தனியார் பஸ் ஒன்று இன்று பிற்பகல் 2.30 மணியளவில் விபத்துக்குள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவரும் பெண் ஒருவரும் காயமடைந்த நிலையில் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நுவரெலியா ஹாவஎலிய பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியின் பாதுகாப்பு வேளியில் மோதி விபத்துக்கள்ளானதில் பாடசாலை மாணவர் ஒருவரும் பொது மகன் ஒருவரும் காயத்திற்குள்ளான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த விபத்து தொடர்பாக தெரியவருவதாவது,
விபத்தில் பரிசுத்த திரித்துவ கல்லூரியில் ஆரம்ப பிரிவில் தரம் நான்கில் கல்வி கற்கும் எம்.சுகிர்தன் (வயது 9) பலத்த காயத்திற்கு உள்ளானதுடன் அவருடன் புஸ்ஸல்லாவ பகுதியை சேர்ந்த பெண் ஒருவரும் காயத்திற்குள்ளாகியுள்ளனர்.
பாதிக்கப்பட்ட இருவரையும் அருகில் இருந்தவர்களின் உதவியுடன் நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் மாணவனை உடனடியாக சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தியுள்ளதாகவும் தேவை ஏற்படும் பட்சத்தில் அவரை கண்டிக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள பெண் சிறிய காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன். சாரதியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM