(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)
வடக்கு,கிழக்கில் 83 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம். இன்னும் பல ஏக்கர் காணிகளை விடுவிக்க வேண்டியுள்ளது. அதனை நாம் கட்டாயமாக விடுவிப்போம் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன சபையில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் கொண்டு வந்த வடக்கு,கிழக்கு காணி விடுவிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பதிலளித்து உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு இடங்களை இராணுவத்திடம் இருந்து விடுவிப்பது தொடர்பில் இராணுவ தளபதியுடன் பேசினேன். ஒரு வருட காலப்பகுதியில் அதனை விடுவிக்க முடியும் என அவர் என்னிடம் கூறினார். இராணுவ தலைமையகத்திற்கு மாற்று காணி தேவையாகும். தற்போது அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. முழு முகாமையும் அங்கு கொண்டு செல்ல வேண்டும்.
இராணுவ முகாமொன்றுக்கு புதிதாக காணியொன்றை சுவீகரிக்க பெரும் காலம் தேவையாகும். அடிப்படை வசதிகள் சீர் செய்ய வேண்டும். என்றாலும் வடக்கு, கிழக்கு காணிகள் விடுவிப்பு கட்டாயமாக நடக்கும். இராணுவத்தை அங்கே வைத்துக்கொள்ள மாட்டோம். தற்போது அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். மீண்டும் இராணுவ தளபதியுடன் பேசி நடவடிக்கை எடுப்பேன். முழுமையாக அதனை துரிதப்படுத்த ஏற்பாடுகளை முன்னெடுப்போம்.
வடக்கு,கிழக்கில் 83 ஆயிரம் ஏக்கர் காணிகளை விடுவித்துள்ளோம். இன்னும் பல ஏக்கர் காணிகளை கட்டாயம் விடுவிப்போம்.தாமதம் உள்ளது. என்றாலும் நிச்சயமாக விடுவிப்போம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM