"83 ஆயிரம் ஏக்கர் காணி­களை விடு­வித்­துள்ளோம்"

Published By: Vishnu

21 Jun, 2018 | 08:12 AM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

வடக்கு,கிழக்கில் 83 ஆயிரம் ஏக்கர் காணி­களை விடு­வித்­துள்ளோம். இன்னும் பல ஏக்கர் காணி­களை விடு­விக்க வேண்­டி­யுள்­ளது. அதனை நாம் கட்­டா­ய­மாக விடு­விப்போம் என பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவன் விஜே­வர்­தன சபையில் தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கி­ழமை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஸ்ரீநேசன் கொண்டு வந்த வடக்கு,கிழக்கு காணி விடு­விப்பு தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு பதி­ல­ளித்து உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

மட்­ட­க்க­ளப்பு மாவட்டத்தில் பல்­வேறு இடங்­களை இரா­ணு­வத்­திடம் இருந்து விடு­விப்­பது தொடர்பில் இரா­ணுவ தள­ப­தி­யுடன் பேசினேன். ஒரு வருட காலப்­ப­கு­தியில் அதனை விடு­விக்க முடியும் என அவர் என்­னிடம் கூறினார். இரா­ணுவ தலை­மை­ய­கத்­திற்கு மாற்று காணி தேவை­யாகும். தற்­போது அதற்­கான நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளது. முழு முகா­மையும் அங்கு கொண்டு செல்ல வேண்டும்.

இரா­ணுவ முகா­மொன்றுக்கு புதி­தாக காணி­யொன்றை சுவீ­க­ரிக்க பெரும் காலம் தேவை­யாகும். அடிப்­படை வச­திகள் சீர் செய்ய வேண்டும். என்­றாலும் வடக்கு, கிழக்கு காணிகள் விடு­விப்பு கட்­டா­ய­மாக நடக்கும். இரா­ணு­வத்தை அங்கே வைத்­துக்­கொள்ள மாட்டோம். தற்­போது அதற்­கான அனைத்து ஏற்­பா­டு­க­ளையும் செய்­துள்ளோம். மீண்டும் இரா­ணுவ தள­ப­தி­யுடன் பேசி நட­வ­டிக்கை எடுப்பேன். முழு­மை­யாக அதனை துரி­தப்­ப­டுத்த ஏற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம்.

வடக்கு,கிழக்கில் 83 ஆயிரம் ஏக்கர் காணி­களை விடு­வித்­துள்ளோம். இன்னும் பல ஏக்கர் காணிகளை கட்டாயம் விடுவிப்போம்.தாமதம் உள்ளது. என்றாலும் நிச்சயமாக விடுவிப்போம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13