நுவரெலியா - அட்டன் பிரதான வீதியில் கொட்டகலை வைத்தியசாலைக்கு அருகில் லொறியுடன் லொறி ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலத்த காயங்களுக்குள்ளாகிய நிலையில் கொட்டகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த விபத்து சம்பவம் இன்று மதியம் 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இதில் அட்டன் பகுதியிலிருந்து தலவாக்கலை பகுதியை நோக்கி கற்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் அட்டனிலிருந்து நுவரெலியா பகுதிக்கு சாணம் ஏற்றிச் சென்ற லொறி ஒன்றும் மோதியதில் விபத்துக்குள்ளாகியுள்ளன.
சாணி உரம் ஏற்றிச் சென்ற லொறி கற்களை ஏற்றிச் சென்ற லொறியுடன் பின் பகுதியில் மோதுண்ட நிலையில் சாணம் ஏற்றிச் சென்ற லொறியின் சாரதி பலத்த காயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்,
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM