(இரோஷா வேலு)
தெற்கு அதிவேக வீதியில் குருந்து கஹஹெதெக்ம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜைகளான தாயும் மகளும் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பொலிஸ் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்துகஹஹெதெக்ம வீதிக்கருகில் வைத்து கொட்டாவையிலிருந்து காலி நோக்கி புறப்பட்ட வான் ஒன்று, இயந்திரகோளாறு காரணமாக வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதன்போது, வானில் பயணித்த நான்கு அவுஸ்திரேலிய பிரஜைகளும் லொறியின் சாரதியும் காயங்களுக்குள்ளாகி நாகொட மற்றும் அல்லிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 37 வயதுடைய அவுஸ்திரேலிய பிரஜையான கொலின் லுயிஸ் மொனிக்கா மற்றும் அவரது மகளான நான்கு வயதுடைய கொலின் பொப் கப்ரியேலும் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவத்தில் காயமடைந்த மேலும் மூவரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM