வீதி விபத்தில் அவுஸ்திரேலிய பிரஜைகள் இருவர் பலி 

Published By: Daya

20 Jun, 2018 | 02:25 PM
image

(இரோஷா வேலு) 

தெற்கு அதிவேக வீதியில் குருந்து கஹஹெதெக்ம பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தொன்றில் அவுஸ்திரேலிய நாட்டுப் பிரஜைகளான தாயும் மகளும் பலியாகியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து பொலிஸ் ஊடகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 

எல்பிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருந்துகஹஹெதெக்ம வீதிக்கருகில் வைத்து கொட்டாவையிலிருந்து காலி நோக்கி புறப்பட்ட வான் ஒன்று, இயந்திரகோளாறு காரணமாக வீதியில் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. 

இதன்போது, வானில் பயணித்த நான்கு அவுஸ்திரேலிய பிரஜைகளும் லொறியின் சாரதியும் காயங்களுக்குள்ளாகி நாகொட மற்றும் அல்லிட்டிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 37 வயதுடைய அவுஸ்திரேலிய பிரஜையான கொலின் லுயிஸ்  மொனிக்கா மற்றும் அவரது மகளான நான்கு வயதுடைய கொலின் பொப் கப்ரியேலும் உயிரிழந்துள்ளனர். 

இச்சம்பவத்தில்  காயமடைந்த மேலும் மூவரும் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51