கிளிநொச்சி அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் நவீன ஸ்கேனர் இயந்திரத்துடன் புதையல் தேடிய இருவரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அறிவியல் நகர் காட்டுப்பகுதியில் நவீன ஸ்கேனர் இயந்திரம் கொண்டு சந்தேகத்திற்கிடமான இருவர் புதையல் தேடுவது தொடர்பில் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றி வளைப்பில் ஒருவரை கைது செய்துள்ளனர்
இதன்போது குறித்த நபர்கள் பயன்படுத்திய சுமார் 50 லட்சம் மதிக்கத்தக்க நவீன ஸ்கேனர் இயந்திரமும் அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மீட்கப்பட்ட கருவியும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரையும் இன்று கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாகவும் கிளிநொச்சி பொலிசார் தெரிவிக்கின்றனர்.
குறித்த பகுதியில் கடந்த சில மாதங்களிற்கு முன்னர் விடுதலை புலிகளினால் புதைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் கொள்கலன் ஒன்று தொடர்பில் பொலிசாரால் தேடுதல் மேற்கொள்ளப்பட்டு எதுவும் கிடைக்காத நிலையில் கைவிடப்பட்டமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM