ஆலையடிவேம்பு, பெரியகளப்பு காணிப் பிரச்சினையை சமூகப் பிரச்சினையாக உருமாற்றி தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் இனங்களுக்கிடையே இனவாதத்தை விதைக்க வேண்டாம் என அம்பாறை மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அரசியல்வாதிகளிடமும் பொதுமக்களிடமும் கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு, பெரியகளப்பு காணிப்பிரச்சினை தொடர்பில் நேற்று முன்தினம் ஏற்பட்ட நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பெரியகளப்பு பிரதேசத்தில் வேலியிட முற்பட்ட முஸ்லிம்கள் சிலரை தமிழர்கள் தாக்கியதாக சில அரசியல்வாதிகளின் முகநூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கருத்து முற்றிலும் தவறானது. முஸ்லிம்கள் மாத்திரமல்ல களப்பில் வேலியிடும் அனைவரையும் தற்போது பொதுமக்கள் தடுத்து வருகின்றனர்.
ஆலையடிவேம்பு, பெரியகளப்பு பிரதேசம் நீரியல்வள திணைக்களத்துக்குரியது என அத்திணைக்களம் அண்மையில் பகிரங்க பெயர்ப்பலகையை நாட்டியது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன்னர் களப்பு பிரதேசத்தை பாதுகாத்துத் தருமாறு பல்வேறு அமைப்புக்களும் போராட்டத்தில் ஈடுபட்டன. அப்போராட்டமானது களப்பை ஆக்கிரமித்துள்ள தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள மக்களுக்கு எதிரானதே தவிர தனியே முஸ்லிம்களுக்கு எதிரானதல்ல என்பது அனைவரும் அறிந்த விடயம்.
ஆனால் இப்பிரச்சினையை சில அரசியல்வாதிகள் தமது அரசியல் இலாபத்த்துக்காக தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினையாக மாற்ற முற்படுகின்றனர். எனவே இவ்வாறான வீண் வார்த்தைகளை பரப்பி மக்களை குழப்ப வேண்டாம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM