"மோசடியில் ஈடுபட்டவர்கள் அரசாங்கத்தை விமர்சிப்பது வேடிக்கையாகவுள்ளது"

Published By: Vishnu

19 Jun, 2018 | 04:18 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரச நிதியினை பல்வேறு வழிமுறைகளில் கொள்ளையடித்தவர்கள் இன்று அபிவிருத்தி தொடர்பிலும்,  நிதி குற்றம் தொடர்பிலும் தேசிய அரசாங்கத்திற்கு எதிராக குற்றம் சுமத்துவது வேடிக்கையாகவே உள்ளது என அமைச்சர் பாட்லி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்ண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கடந்த ஆட்சியில் அதாவது 2005 தொடக்கம் 2014 வரையிலான காலப்பகுதியில் கணிய வள எண்ணெய் இறக்குமதி, பெருந்தெருக்கள் அபிவிருத்தி, மிக் விமான கொள்வனவு,  உள்ளிட்ட பல வழிமுறைகளில் அரச நிதியினை கொள்ளையடித்தவர்கள். இன்று தேசிய அரசாங்கத்தின் சில குறைப்பாடுகள் தொடர்பில் விமர்சிப்பது வேடிக்கையாகவே உள்ளது.

தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்ற சில மோசடிகளை வைத்துக் கொண்டு முழுமையாக ஆட்சியினை தவறென்று குறிப்பிட முடியாது.  இடம்பெற்ற நிதி மோசடியிற்கு தகுந்த சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த அரசாங்கத்தை போன்று மூடி மறைக்கவில்லை. 

அரசாங்கத்தின் திருத்திக் கொள்ளக்கூடிய குறைகளை பெரிதுப்படுத்தி தங்களை பிரபல்யப்படுத்துபவர்கள் நிதி மோசடி குற்றவாளிகளே ஆவர். எனவே தங்களின் குற்றங்களை மறைக்க அரசாங்கத்தின் மீது குற்றம் சுமத்துவதை கடந்தகால அரசியல்வாதிகள் வழக்கமாக கொண்டுள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 13:57:29
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08