(இராஜதுரை ஹஷான்)
ஞானசார தேரருக்கு வழங்கப்பட்டுள்ள ஆறு மாதகால கடூழிய சிறைவாசம் என்பது அவரது மத ஆளுமையினை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகவே அமையும் என பொதுபலசேனா அமைப்பின் ஏற்பாட்டாளர் சுமங்கல நந்த தேரர் தெரிவித்தார்.
ஞானசார தேரரின் உடல் ஆரோக்கியம் கருதி இன்று பொதுராஜ விகாரையின் முன்னிலையில் பல நூற்றுக்கணக்கான பெளத்த மத குருமார்களும் பொது மக்களும் சத்தியகிரக மத அனுஷ்டானத்தில் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
சிறைவாசம் அனுபவிக்கும் பொதுபலசேனா அமைப்பின் தலைவர் ஞானசார தேரர் விடுதலையாகி வந்ததன் பின்னரும் அவரது சமூக சேவைகள் தொடரும். அவரது பணிகளை முடக்கவே அரசாங்கம் அவருக்கு நியாயமற்ற முறையில் கடூழிய சிறை தண்டனையை வழங்கியுள்ளது.
இராணுவத்தினருக்கு அரசாங்கத்தினால் இழைக்கப்படுகின்ற அநீதிகளை கண்டு பொறுத்துக் கொள்ள முடியாத நிலையிலே அவர் ஆத்திரமடடைந்து எதிர்தரப்பினரை சாடினார். இவ்விடயம் சட்டத்தின் பார்வையில் குற்றமாக காணப்பட்டாலும். மத ரீதியில் ஒருபோதும் குற்றமற்ற விடயமாகவே காணப்படுகின்றது.
ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி நாட்டின் பொது அமைதியை ஒருபோதும் சீர்குலைக்க மாட்டோம். அவரை விடுதலை செய்யக் கோரி ஜனாதிபதியிடம் கோரிக்கைகளையும் சமர்ப்பிக்க மாட்டோம் அவ்வாறு செயற்படுவது அவரது கொள்கைகளுக்கு முரணானதாக அமையும். ஆறு மாத கடூழிய சிறைவாசம் என்பது அவரது மத ஆளுமையினை மேம்படுத்துவதற்கான வழிமுறையாகவே அமையும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM