(நா.தினுஷா)
தென்மாகாணத்தில் இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்த சிறுவர்களின் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளதாக தொற்றுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் நாயகம் பபா பாலியவர்தன தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
மே மாதம் முதல் தற்போது வரை 20 சிறுவர்கள் இன்புளுவன்சா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அத்துடன் இவ்வாறு உயிரழந்துள்ள சிறுவர்களில் 10 பேர் இருதயத்தில் துளை, மூலை வளர்ச்சி குறைவு, அங்கவீனமான மற்றும் வெவ்வேறான நோய்காரணங்களினால் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் என கண்டறிப்பட்டுள்ளது.
ஆகவே இவ்வாறான சிறுவர்களுக்கு விரைவில் இன்புளுவன்சா நோய் தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனினும் தற்போது தென்மாகாணத்தில் இன்புளுவன்சா தொற்றுநோய் முழுமையாக கட்டுபாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும் சப்ரகமுவ மாகாணத்தில் இன்புளுவன்சா பரவுவதற்கான வாய்ப்பில்லை. இருப்பினும் எம்பிலிப்பிட்டிய பிரதேசத்தில் இன்புளுவன்சா தாக்கம் அவதானிக்கப்பட்டுள்ளதால் அம் மாகாணத்தில் முழுமையாக வைரஸ் தொற்று பரவுவதை குறைப்பதற்கான எச்சரிக்கையும் வைத்திய ஆலோசனையும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM