பல துப்பாக்கிப் பிரயோக சம்பவங்களுடன் தொடா்புடைய முக்கிய சூத்திரதாரி ஒருவரை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் பொரளை பகுதியில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்தார்.
'சொல்டா' என அழைக்கப்படும் அசித்த பிரேமதிலக்க என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்படும் போது கைத்துப்பாக்கியொன்றை குறித்த நபரிடம் இருந்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் மீட்டுள்ளனர்.
குறித்த நபர் மாலபே, அத்துருகிரிய பகுதியில் இடம் பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களுடன் தொடா்புடைய பிரதான சந்தேக நபர் ஆவார்.
கைதுசெய்யப்பட்ட நபர் பிரபல பாதாள உலகத்தலைவர் அங்கொட லொக்காவின் சகா என்பதும் குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM