எதிர்வரும் காலங்களில் நடைபெறும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியே வெற்றிபெற வைப்பதே எனது முதற்பணி. கட்சிக்கு எவ்வகையிலும் மாசினை ஏற்படுத்த முனையமாட்டேன். அதனை ஏற்படுத்த முனைபவர்கள் மீதும் நான் கடுமையாகவே இருப்பேன் என நிமால் சிரிபால டி சில்வா தெரிவித்தார்.
ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் அணியின் மாநாட்டில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட போக்குவரத்து அமைச்சர் நிமால் சிரிபால டி சில்வா, மேற்கண்டவாறு கூறினார்.
அவர் தொடர்ந்து பேசுகையில்,
நான் அரசில் அமைச்சராக இருந்தபோதிலும், எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நான் துரோகம் செய்யவில்லை. அக்கட்சியின் மேம்பாடுகளை முன்னிலைப்படுத்தி அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வருகின்றேன்.
அக்கட்சிக்கு யார் தலைவரானாலும், அத்தலைவருக்கு கட்டுப்பட்டு செயலாற்றுவதில் நான் பின்னிற்கப்போவதில்லை. தனி நபருக்கல்ல. கட்சியே எனக்கு முக்கியமாகும்.
(க.கிஷாந்தன்)
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM