யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் மல்லாகம் சந்தியிலேயே இச் சம்பவம் சற்றுமுன்னர் இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
மரண விசாரணையொன்றுக்காக பொலிஸார் சென்று விட்டு திரும்பிக்கொண்டிருக்கையில் மல்லாகம் சந்திக்கு அருகிலுள்ள தேவாலயமொன்றுக்கு அருகில் இரு இளைஞர் குழுவினருக்கிடையில் மோதல் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் குறித்த மோதல் தொடர்பில் அவ்வழியால் சென்ற பொலிஸார் பொலிஸார் தலையிட்டு விசாரணையில் ஈடுபட்ட நிலையில் அங்கிருந்த இளைஞர்கள் பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொள்ள முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து மோதல் முற்றிய நிலையில் பொலிஸார் துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
குறித்த துப்பாக்கிப்பிரயோகத்திலேயே இளைஞரொருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்தவர் எழாலை பகுதியைச் சேர்ந்த 28 பாக்கியராசா சுதர்சன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM