ரஷ்யாவில் நடைபெற்றுவரும் 21 ஆவது உலகக் கிண்ண கால்பந்தாட்ட அத்தியாயத்தின் நான்காம் நாளான இன்று பரபரப்பான மூன்று போட்டிகள் நடைபெறவுள்ளன.
ஐந்து தடவைகள் உலக சம்பியனான பிரேஸிலுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் இடையில் ரொஸ்டொவ் ஒன் டொன் விளையாட்டரங்கில் இன்று இரவு 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள போட்டி முக்கியம் பெறுகின்றது. இப் போட்டியில் விளையாடவுள்ள ஏழு வீரர்கள் ஒன்பது வருடங்களின் பின்னர் மீண்டும் சந்திக்கவுள்ளனர்.
நைஜீரியாவில் 2009 இல் நடைபெற்ற 17 வயதுக்குட்பட்டவர்களுக்கான உலகக் கிண்ணப் போட்டியில் 1 க்கு 0 என்ற கோல் அடிப்படையில் வெற்றிகொண்டு பிரேஸிலை முதல் சுற்றுடன் சுவிட்சர்லாந்து அணியில் இடம்பெற்ற மத்தியகள வீரர்களான க்ரானிட் ஸாக்கா, ரிக்கார்டோ ரொட்றிகூஸ், முன்கள வீரஹெரிஸ் செவேரோவிக் ஆகியோர் தற்போதைய அணியில் இடம்பெறுகின்றனர்.
இதேவேளை 9 வருடங்களுக்கு முன்னர் சுவிட்சர்லாந்து அணியிடம் தோல்வி அடைந்த அணியில் இடம்பெற்ற கோல்காப்பாளர் அலிசன், மத்திய கள வீரர்களான கெசேமிரோ, பிலிப்பே கூட்டின்ஹோ, முன்கள வீரர் நேமார் ஆகியோர் தற்போதைய பிரேஸில் அணியில் இடம்பெறுகின்றனர்.
அன்று சுவிட்சர்லாந்திடம் அடைந்த தோல்வியை நிவர்த்தி செய்ய இவர்கள் நால்வரும் இன்றைய போட்டியில் முயற்சிக்கவுள்ள அதேவேளை, மீண்டும் பிரேஸிலுக்கு அதிர்ச்சி கொடுக்க சுவிட்சர்லாந்து காத்திருக்கின்றது.
தரப்படுத்தலில் 2இம் இடத்தில் பிரேஸிலும் 6ஆம் இடத்தில் சுவிட்சர்லாந்தும் இடம்பெறுகின்றன. இதன் காரணமாக இன்றைய போட்டி இறுதிவரை பரபரப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த இரண்டு அணிகளும் உலகக் கிண்ணப் போட்டி ஒன்றில் சந்திப்பது இதுவே முதல் தடவையாகும். ஆனால் எட்டு தடவைகள் சிநேகபூர்வ போட்டிகளில் 3 க்கு 2 என்ற ஆட்டக் கணக்கில் பிரேஸில் முன்னிலை வகிக்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM