(எம்.மனோசித்ரா)
தனியார் வைத்தியசாலைகளில் அறவிடப்படும் வட் வரியை அடுத்த வாரம் முதல் நீக்கவுள்ளதாக நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நல்லாட்சி அரசாங்கம் ஆட்சிக்கும் மக்களுக்கும் வாக்குறுதிகளை வழங்கியே ஆட்சிக்கு வந்தது. அதில் முதலாவது அரச சேவை உத்தியோகத்தர்களின் சம்பளத்தினை 10 ஆயிரம் ரூபாவாக அதிகரிப்பதாகும். 100 நாள் வேலைத்திட்டத்தின் மூலம் அதனை நிறைவேற்றியுள்ளோம்.
இது மாத்திரமல்லாது மஹிந்த ராஜபக்ஷ ஆட்சியில் ஒரு வீதமாகக் காணப்பட்ட உள்நாட்டு உற்பத்தியை 3 வீதமாக அதிகரித்துள்ளோம். அதனை 2020 ஆம் ஆண்டில் 6 வீதமாக அதிகரிப்பதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுகாதாரத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ள 3.5 வீத நிதியை 2020 இல் 5 வீதமாக அதிகரிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன்படியே தனியார் வைத்தியசாலைகளுக்கான வட் வரியினை அடுத்த வாரம் முதல் நீக்குவதற்கு தீர்மானித்துள்ளோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM