பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு விரைவில் சேவைக்கு திரும்பவும் - ரோஹண அபயரத்ன 

Published By: Vishnu

17 Jun, 2018 | 03:08 PM
image

தபால் சேவையாளர்கள் அனைவரும் பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு விரைவில் சேவைக்கு திரும்புவதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தபால் மா அதிபர் ரோஹண அபயரத்ன கோரிக்கை விடுத்துள்ளார். 

இது குறித்து அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு கூறினார். 

அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

தபால் சேவை பணியாளர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக 200 வருடகாலமாக மக்களுக்கு சேவை வழங்கிவரும் தபால்சேவை பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளது. 

தற்போது தபால் சேவைக்கான பிரதியீடுகளாக பல்வேறு இணையத்தள வழியான சேவைகள் காணப்படுகின்றன. எனவே தபால் சேவைக்கான போட்டித்தன்மை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இவ்வாறான போட்டிகளுக்கு முகங்கொடுத்து அவற்றில் வெற்றிபெற்று எதிர்காலத்தில் தபால் சேவையை வினைத்திறனுடையதாக மாற்றுவதற்கு முயற்சிக்க வேண்டும். 

எனவே கலந்துரையாடல்கள் மூலம் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும். ஆகவே பணிப்பகிஷ்கரிப்பை கைவிட்டு சேவையாளர்கள் அனைவரும் பணிக்கு திரும்புவதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றோம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58