உலக சந்தையில் பால்மாவின் விலை அதிகரித்துள்ள காரணத்தினால் இலங்கையில் பால்மாவின் விலையை அதிகரிக்கவேண்டுமென்று பால்மா உற்பத்தியாளர்கள் நிறுவனம், நுகர்வோர் அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
அமெரிக்க டொலரின் விலை 160 ரூபாவாக அதிகரித்த காரணத்தினால் உலக சந்தையில் பால்மா விலை அதிகரித்துள்ளது. அதனால் இலங்கையில் விற்பனை செய்யப்படும் பால்மாவின் விலையை 70 ரூபாவினால் அதிகரிப்பதற்கு பால்மா உற்பத்தியாளர்கள் நிறுவனம் நுகர்வோர் அதிகார சபையிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
உலக சந்தையில் ஒரு மெட்ரிக்தொன் பால்மா 3250 அமெரிக்க டொலர் அறவிடப்பட்ட நிலையில், டொலர் விலையேற்றத்தினால் ஒரு மெட்ரிக்தொன் பால்மா 3450 அமெரிக்க டொலராக அதிகரித்தது. இதனால் பழைய விலையில் பால்மா விற்பனை செய்வதால் பல இடையூறுகளை சந்தித்துவருவதாகவும் பால்மா உற்பத்தியாளர்கள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM