கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் விரைவில் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று இடம்பெற்ற தமிரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இச் செயற்குழு கூட்டத்தில் இரா.சம்பந்தன், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், சாந்தி சிறிஸ்கந்தராசா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இந் நிகழ்வில் கலந்துகொண்டு தொடர்ந்தும் உரையாற்றிய சம்பந்தன் மேலும் தெரிவிக்கையில்,
கேப்பாபுலவு மக்களின் காணிவிடயம் சம்மந்தமாக தமிழரசுக் கட்சியின் முயற்சி நீண்டகாலமாக தொடர்ந்துள்ளது. அண்மையில் 136 ஏக்கர் காணி விடப்பட்டுள்ளது. அதற்கு முன்பாகவும் மேலும் பல ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இன்னும் 73 ஏக்கர் விடுபட வேண்டும். இந்த காணிவிடுவிப்பு சம்பந்தமாக நாங்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். இது குறித்த கடந்த வியாழக்கிழமை நான் ஜனாதிபதியினை சந்தித்து காணி விடுவிப்பு குறித்து கலந்துரையாடி கடிதம் ஒன்றிணையும் கையளித்தேன்.
எனவே கேப்பாப்புலவு மக்களின் காணி விடுவிப்பு தொடர்பில் விரைவில் தீர்க்கமான ஒரு முடிவு எடுக்கப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM