ஜப்பானின் முன்னாள் பிரதமரை சந்தித்தார் மைத்திரி

Published By: Vishnu

15 Jun, 2018 | 07:48 PM
image

ஜப்பானின் முன்னாள் பிரதமர் யுக்கியோ ஹடோயாமாவுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குமிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் நேற்று இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இது குறித்து ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜப்பானிய முன்னாள் பிரதமர் யுக்கியோ ஹடோயாமாவின் தனிப்பட்ட நிதி அன்பளிப்பினால் பொல்கஸ்சோவிட்ட தஹம் செவன விகாரையின் சர்வதேச பெளத்த நிலையத்தில் நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான மொத்த செலவு 2500 கோடி ரூபாவாகும். 

தற்போது இங்கு ஆங்கிலம் மற்றும் ஜப்பானிய மொழிகள் கற்பிக்கப்படுகின்றன. எதிர்காலத்தில் இங்கு தொழிற்பயிற்சி நிலையம் ஒன்றிணையும் ஆரம்பிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

இலங்கையின் போக்குவரத்து நெருக்கடியையும் சுத்தமான குடிநீரை பெற்றுக் கொடுப்பதற்கான செயற்றிட்டத்துக்கும் பங்களிப்பு வழங்குவோம் என ஜப்பானிய முன்னாள் பிரதமர் ஜனாதிபதியிடம் தெரிவித்தார்.

பொல்கஸ்சோவிட்ட தஹம் செவன விகாரையின் சர்வதேச பெளத்த நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்படும் சதஹம் சேவா கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டும் புண்ணிய நிகழ்வில் கலந்து கொள்ளவே யுக்கியோ ஹடோயாமா இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58