(நா.தினுஷா)
நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மாத்திரமல்ல கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள அனைவரும் என்னை பிரதமராகுமாறு வலியுறுத்துகின்றனர் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
கண்டியில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பாராளுமன்றத்தில் அதிகாரமாற்றம் ஏற்பட்டால் நிச்சயம் பிரதமர் ஆவது குறித்து தீர்மானிக்க முடியும். நல்லாட்சி அரசாங்கத்திலிருந்து விலகிய ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 உறுப்பினர்கள் மாத்திரமல்ல கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள அனைவரும் என்னை பிரதமராகுமாறு வலியுறுத்துகின்றனர்.
ஜனாதிபதி தேர்தலின் வேட்பாளர் குறித்து பேசப்படுகின்றது. ஆனால் மக்கள் விடுதலை முன்னணி 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்துள்ளது. இந் நிலையில் அரசாங்கம் எவ்வாறான தீர்மானத்தில் உள்ளது என்பதை அவதானித்து வருகின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசியக் கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொண்டு எம்முடன் இணைய முடியாது. வருட இறுதிக்குள் அவர் இது தொடர்பான தீர்க்கமான ஒரு முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும். எவ்வாறாயினும் சுதந்திரக் கட்சியுடன் இணைவது குறித்து நாங்கள் இன்னும் கருத்திற் கொள்ளவில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM