வவுனியாவில் டெங்கு நோய் தீவிரம்

Published By: Digital Desk 4

15 Jun, 2018 | 03:39 PM
image

வவுனியா நகர்ப்பகுதியில் அண்மையில் டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகரித்துக்காணப்படுவதாகவும் இதன்காரணமாக ஐந்திற்கும் மேற்பட்ட நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக வவுனியா சுகாதாரப்பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து மேலும் தெரியவருகையில், வவுனியா நகரை அண்டிய பகுதிகளான தேக்கவத்தை, வெளிவட்ட வீதி, கற்குழி ஆகிய பகுதிகளிலிருந்து ஐந்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் உள்ளக தொற்று என இனங்காணப்பட்டுள்ளனர். 

கடந்த 2015ஆம் ஆண்டிலிருந்து குறித்த பகுதிகளில் டெங்கு நுளம்பின் குடம்பிகள் இருந்துவருவதை பூச்சியியலாளர்கள் ஆய்வின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டு வருகின்றது.

பொதுமக்கள் நுளம்புக் குடம்பிகளை இல்லாதொழிப்பதற்கு பொது சுகாதாரப்பரிசோதகர்களின் ஆலோசனைகளைப் பெற்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

அதற்கமைய தமது இருப்பிடங்களை சுத்தப்படுத்தி சிரமதானம் மேற்கொள்ளுமாறும் குறித்த பகுதிகளில் இனிவரும் காலங்களில் இவ்வாறான டெங்கு நுளம்புக்குடம்பிகள் இனங்காணப்பட்டால் பொது சுகாதாரப்பரிசோதகர்கள் அவ்வீட்டின் உரிமையாளருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்கள்.

அத்துடன் வவுனியாவில் கடந்த 2009ஆம் ஆண்டு குறித்த பகுதிகளிலிருந்தே அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50
news-image

திருகோணமலை வைத்தியசாலையில் நோயாளர் காவு வண்டிகள்...

2024-04-18 17:13:38