(ரி.விரூஷன்)
யாழ். வட்டுக்கோட்டை தனியார் பாடசாலையின் ஆசிரியர் ஒருவர் பதின்ம வயது மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த ஆசிரியர் வட்டுக்கோட்டையிலுள்ள தனியார் பாடசாலையில் கற்பித்து வருவதுடன் அங்கு கல்வி கற்கும் மாணவிகளை தனியார் வகுப்பிற்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். இவ்வாறு தனியார் வகுப்பிற்கு வருகை தந்த மாணவிகள் சிலர் மீது பாலியல் துஷ்பிரயோகமும் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இது தொடர்பாக சங்கானை பிரதேச செயலக சிறுவர் பாதுகாப்பு பிரிவுக்கு கிடைத்த தகவலுக்கிணங்க அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதுடன் பாதிக்கப்பட்ட மாணவிகள் மூவரது வாக்குமூலங்களையும் பதிவு செய்திருந்தனர்.
இதனையடுத்தே வட்டுக்கோட்டை பொலிஸார் அவரை கைதுசெய்து நேற்று மல்லாகம நீதிமன்றல் ஆஜர்படுத்தியபோது நீதிவான் அவரை தொடர்ந்து 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM