விடுதலைப்புலிகள் இயக்கத்தை குற்றச்செயல்களில் ஈடுபடும் அமைப்பென கருதுவதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என சுவிற்சர்லாந்தின் சமஸ்டி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பிற்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட 13 பேரிற்கு சிறைத்தண்டனை வழங்குவதற்கு சுவிட்சர்லாந்தின் சமஸ்டி குற்றவியல் நீதிமன்றம் மறுத்துள்ளது.
குறிப்பிட்ட 13 பேரும் குற்றங்களில் ஈடுபட்ட அமைப்பொன்றிற்கு ஆதரவு வழங்கியதுடன் அதன் நடவடிக்கைகளில் பங்கெடுத்தார்கள் என்ற குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்துள்ள நீதிமன்றம் அவர்களை விடுதலை செய்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கும் டபில்யூ டீடீசி அமைப்பிற்கும் இடையில் தொடர்புள்ளதற்கான ஆதாரங்கள் எவையும் வலுவான முறையில் முன்வைக்கப்படவில்லை எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
விடுதலைப்புலிகள் இயக்கத்தை குற்றச்செயல்களில் ஈடுபடும் அமைப்பென கருதுவதற்கான வலுவான ஆதாரங்கள் இல்லை என நீதிபதி தெரிவித்துள்ளார்.
குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு 18 மாதம் முதல் ஆறுமாதம் வரையிலான சிறைத்தண்டனையை வழங்கவேண்டும் என சுவிட்சர்லாந்து அரச தரப்பு சட்டத்தரணிகள் விடுத்தவேண்டுகோளை நீதிபதிகள் ஏற்க மறுத்துள்ளனர்.
மேலும் குற்றம்சாட்டப்பட்ட 13 பேரில் 8 பேர் விடுதலைசெய்யப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மோசடிகளில் ஈடுபட்டதாக மாத்திரம் தெரிவித்துள்ள நீதிபதிகள் அவர்களிற்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனைகளை வழங்கியுள்ளது.
இந்த விசாரணைகளிற்கான செலவை அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM