இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், பிரதி அமைச்சருமான கே.கே.மஸ்தான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஜனாதிபதியுடன் இன்று சந்தித்து பிரதி அமைச்சர் பதவியை பெற்ற பின் ஏற்பட்டுள்ள நிலமை தொடர்பில் கலந்துரையாடியிருந்தேன். நான் மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து விவகார பிரதி அமைச்சினை ஏற்றுக் கொண்ட நிலையில் இந்து விவகார பிரதி அமைச்சராக நான் நியமிக்கப்பட்டதற்கு எதிராக அரசியல் நோக்கம் கருதி திட்டமிட்டு எனக்கு எதிரான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.
எனினும் மதங்களுக்கிடையில் முரண்பாடுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காகவும், பொது அமைப்புக்கள் சில கேட்டுக் கொண்டதற்கு இணங்கவும் நானாக முன்வந்து இந்து விவகார பிரதி அமைச்சர் பதவியை இராஜினாமா செய்துள்ளதுடன் ஏனைய அமைச்சின் பிரதி அமைச்சராக செயற்படுவேன் எனத் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த செவ்வாய் கிழமை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் அவர்களுக்கு மீள்குடியேற்றம், புனர்வாழ்வு, வடக்கின் அபிவிருத்தி மற்றும் இந்து விவகார பிரதி அமைச்சராக ஜனாதிபதி முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.
இந்நிலையில் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு இந்து விவகார பிரதி அமைச்சர் பதவி வழங்கப்பட்டமைக்கு எதிராக இந்து அமைப்புக்கள் உட்பட பலரும் எதிர்ப்பு வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM