(எம்.மனோசித்ரா)
கதிர்காமம் கிரிவெஹர விகாரையின் விகாரதிபதி கொபவக தம்மானந்த தேரர் மற்றும் விதாபொல சோபித தேரர் ஆகியோர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தை கண்டித்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ , நாட்டில் யாருக்குமே பாதுகாப்பு இல்லை. தலைவர்கள் தூக்கத்தில் இருப்பதனாலேயே இவ்வாறு இடம்பெறுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கேள்வி : துப்பாக்கிச் சூட்டுக்குள்ளான விகாராதிபதி கோட்டாபாய ராஜபகஷவுக்கு எதிராக கருத்துக்களை முன்வைத்துள்ளதாகவும், அதன் காரணமாக அவரும் இச் சம்பவத்திற்கும் தொடர்பு இருப்பதாக கூறப்படுகின்றது?
பதில் : அவ்வாறு எதுவும் இல்லை. அதில் எந்த உண்மையும் இல்லை.
கேள்வி : தற்போது நாட்டில் காணப்படும் இந்நிலைமை தொடர்பாக உங்களுடைய கருத்து?
பதில் : இவ்வாறான விடயங்கள் குறித்து விஷேடமாக கவனத்தில் கொள்ளப்பட வேண்டும். அதே வேளை நியாயமான துரித விசாரணைகளும் முன்னெடுக்கப்பட வேண்டும். இவற்றுக்கான தீர்வுகள் விரைவில் காணப்படாவிட்டால் நாட்டில் எவருக்குமே வாழ முடியாத நிலை தோன்றிவிடும். யாருக்கும் பாதுகாப்பு இல்லை. இது நாட்டுக்கு நல்லதல்ல.
இவ்வாறான சம்பவங்கள் மூலம் நாட்டில் நீதி எந்த நிலையில் உள்ளது என்பது தெளிவாகின்றது. எவ்வாறிருப்பினும் நீதி அமைச்சு தான் இதற்கு பொறுப்பு கூற வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM