கடந்த காலத்தில் மாணவர்களின் பாடசாலை சீருடை துணிகளை வழங்குவதிலும் பாரிய கொள்ளை இடம்பெற்றுள்ளது. முன்னைய அரசாங்கம் சீருடை துணி மாபியாவையே செய்துள்ளது. அதை தடுக்கவே சீருடை துணிகளுக்கு பதிலாக நிதி வவுச்சர்களை வழங்க தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.
400ரூபாய் தொடக்கம் 1700 ரூபாய் வரையில் மாணவர்களின் சீருடை துணிகளுக்கான நிதி வவுச்சர்களை வழங்க தீர்மானித்துளதாகவும் அவர் குறிப்பிட்டார்.அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் வாராந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
அரச பாடசாலைகளில் மாணவர்களுக்கு இலவசமாக சீருடை துணிகளை வழங்குவது வழமையான ஒன்றாகவே காணப்படுகின்றது. இந்த முறைமை எமது ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் தான் முன்னெடுக்கப்பட்டது. எனினும் கடந்த காலங்களில் இந்த விவகாரம் தொடர்பில் பல பிரச்சினைகள் காணப்பட்டன. எனினும் நான் கல்வி அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர் இந்த சிக்கல் தொடர்பில் முக்கியத்துவம் கொடுத்து தேடிப் பார்த்தேன். 42 இலட்சம் மாணவர்கள் இந்த இலவச பாடசாலை சீருடை துணிகளை பெற்றுக்கொள்கின்றனர் . எனினும் இந்த தொகையை வழங்குவதாக குறிப்பிட்டாலும் இதில் 25வீதமானது மாணவர்களுக்கு இது பயனற்றதாகவே காணப்படுகின்றது. அதேபோல் தரம் குறைந்த சீருடைகளை கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மூன்று நிறுவனங்களின் மூலமாக பரிசோதனை ஒன்றையும் மேற்கொண்டேன். அதன் அடிப்படையில் சரியான வகையில் இந்த சீருடைகளை மாணவர்களுக்கு வழங்கவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த சீருடை விடயத்திலும் மிகப்பெரிய கொள்ளை இடம்பெற்றுள்ளது. ஆகவே இப்போது நாம் மாற்று நடவடிக்கைகளை மேற்கொள்ள தீர்மானம் எடுத்தோம். எனவே இனிவரும் காலங்களில் மாணவர்களுக்கு சீருடை துணிகளை வழங்குவதற்கு பதிலாக நிதி வவுச்சர்களை வழங்குவது என்ற தீர்மானத்தை மேற்கொண்டு அமைச்சரவைன் அங்கீகாரத்தையும் பெற்றுள்ளோம்.
அமைச்சரவையில் இந்த விவகாரங்களை நாம் முன்வைத்து பூரண தெளிவூட்டலை வழங்கிய பின்னர் அமைச்சரவையில் அனைவரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். இந்த முறைமையில் எமக்கு உள்ள சாதகமான விளைவுகள் அதிகமாகும். இதில் 2015ஆம் ஆண்டுக்கான சீருடை விநியோகம் அதற்கு முன்னைய ஆண்டு நடைபெற்றுள்ளது. அப்போதைய விலைக்கு அமைய அரசாங்கம் 2300 மில்லியன் ரூபாய்களை செலவு செய்துள்ளது. இந்தளவு தொகை பணத்தை செலவிட்டும் மாணவர்களின் சீருடை பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியாமல் போயுள்ளது.
எனினும் இப்போது நாம் முன்னெடுத்துள்ள முறைமையில் அவ்வாறான எந்தவித பிரச்சினையும் ஏற்படாது. குறிப்பாக சீருடைகள் வழங்கும் முறைமையில் மூன்று கட்டமைப்புக்கு அமையவே வழங்கப்படுகின்றன. இதில் 1-5 ஆம் வகுப்புகளுக்கு ஒரு கட்டமைப்பின் கீழும் 6-10ஆம் வகுப்புகள் வரையில் இரண்டாம் கட்டமைப்பின் கீழும் சாதாரண தரம் மற்றும் உயர்தர மாணவர்களுக்கு மூன்றாம் கட்டமைப்பின் கீழும் தான் சீருடை துணிகள் வழங்கப்பட்டன. இதில் மாணவர்களின் உயரம் பருமனுக்கு அமைய வழங்கும் துணிகளின் அளவில் சிக்கல் ஏற்படும். அதேபோல் பருமனில் சிறிய மாணவர்களுக்கு வழங்கப்படும் துணிகள் மீதமாகிவிடும். ஆகவே இதில் பாரிய நஷ்டம் ஏற்படும். கடந்த காலங்களில் இந்த சிக்கல் நிலைமை காணப்பட்டது.
ஆகவே இந்த முறைமையில் உள்ள சிக்கல்களை தவிர்க்கும் வகையில் நாம் மாற்று நடவடிக்கைகளை ஆராய்ந்து தீர்மானம் எடுத்துள்ளோம். அதாவது 1-5 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கப்படும் சீருடை துணியின் விலை மதிப்பு சந்தை பெறுமதியின் அடிப்படையில் 350ரூபாய் ஆகும். எனினும் நாம் 400ரூபாய் நிதி வவுச்சர் வழங்குகின்றோம். அதேபோல் 375ரூபாய் பெறுமதியான துணிகளை பெற்றுக்கொள 400ரூபாய் நிதி வவுச்சர் வழங்குகின்றோம். 470ரூபாய் பெறுமதியான சீருடை துணிக்கு நாம் 600ரூபாய் தொகையை வழங்குகின்றோம். அதேபோல் இந்த பாடசாலை மாணவர்களுக்கான சீருடை வழங்குவதில் அதி கூடிய தொகை பெளத்த பிக்கு மாணவர்களுக்கான காவி உடைக்காகவே செலவாகின்றது. இந்த தொகை 1700 ரூபாய். உயர் வகுப்பு மாணவர்களின் சீருடைக்கு 1000 ரூபாய் தொடக்கம் 1300 வரையில் செலவாகின்றது. ஆகவே 400 ரூபாய் தொடக்கம் 1700 ரூபாய் வரையில் நாம் மாணவர்களின் சீருடை துணிக்கான நிதி வவுச்சர்களை வழங்க தீர்மானித்துள்ளோம்.
இவ்வாறு மாணவர்களுக்கு வழங்கும் சீருடை துணிக்கான நிதி வவுச்சர்களின் போதும் சாதாரண சந்தை விலையை விடவும் அதிக தொகையை நாம் வழங்க தீர்மானித்துள்ளோம். எமக்கு சில நிறுவனங்களை மாத்திரம் கவனத்தில் கொண்டு மாணவர்களின் சீருடையில் கொள்ளையடிக்க அனுமதிக்க முடியாது. அதேபோல் இவ்வாறு நிதியை ஒதுக்கினாலும் 500மில்லியன் ரூபாய்கள் கல்வி அமைச்சிற்கு எஞ்சுகின்றது.
இந்த வவுச்சர்களை வழங்கும் போதும் பாடசாலை அதிபர் உரிய வகுப்பு ஆசிரியர், பெற்றுக்கொண்ட மாணவர்களின் கையொப்பம் என்பனவும் கவனத்தில் கொள்ளப்படும். அதேபோல் துணிகளை விற்கும் கடைகளின் உரிமையாளர்கள் கூட இந்த வவுச்சரில் உறுதிப்படுத்த வேண்டும். இவ்வாறு எந்த வகையிலும் சிக்கல் நிலைமைகள் ஏற்படாத வகையில் கவனமாக நாம் கையாண்டு வருகின்றோம். எந்த வகையிலும் எதிர்காலத்தில் சிக்கல்கள் ஏற்படாத வகையில் கையாள்கின்றோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM