பொருளாதார மற்றும் அரசியல் உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நியூஸிலாந்து பிரதமர் ஜோன் கீ மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று இலங்கை வருகின்றார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட வர்த்தக சமூகத்தினரை கொழும்பில் சந்திக்கும் பிரதமர் ஜோன் கீ இலங்கையில் நியூசிலாந்தின் புதிய முதலீடுகள் தொடர்பில் கவனம் செலுத்த உள்ளார். அத்துடன் அனைத்துலக ஜனநாயக ஒன்றியத்தின் நிறைவேற்று சபை கூட்டத்திற்கும் தலைமைத்தாங்க உள்ளார்.
நியூஸிலாந்து பிரதமர் எம்மை சந்திப்பது தொடர்பில் இது வரையில் உத்தியோகப்பூர்வமாக எமக்கு அறிவிக்க வில்லை. அவர் மூன்று நாட்கள் இலங்கையில் தங்கிருயிருக்கும் நிலையில் சந்திப்பதற்கே வாய்ப்புள்ளதாகவும் எதிர் கட்சி தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.
இலங்கையில் காணப்பட்ட உள் நாட்டு போர் காரணமாக கடந்த 45 வருடகாலமாக வலுவான பொருளாதார மற்றும் அரசியல் ரீதியிலான தொடர்புகளை முன்னெடுக்க முடியாமல் போயுள்ள நிலையில், தற்போது அதற்கு சிறந்த சூழல் காணப்படுவதாகவும் இலங்கை விஜயம் தொடர்பில் நியூஸிலாந்து பிரதமர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கடந்த கால இழப்புகளில் இருந்து மீள்வதற்கும் இலங்கையின் நல்லிணக்க பொறிமுறைக்கும் நியூஸிலாந்து அரசாங்கம் முழுமையாக ஒத்துழைப்பு வழங்கும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM