(எம்.எம்.மின்ஹாஜ்)
புதிய கலப்பு முறையின் பிரகாரம் மாகாண சபைத் தேர்தலை ஐம்பதுக்கு ஐம்பது வீதம் நடத்துவதா? அல்லது அறுபதுக்கு நாற்பது வீதம் நடத்துவதா? என்பதனை பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
தெனியாய தேசிய பாடசாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
நாட்டில் தேர்தல்கள் தாமதமாகின்றன. உரிய நேரத்தில் தேர்தல் நடத்தாவிடின் நாட்டிலும் அரச நிறுவனங்களிலும் பல குழப்பங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே தேர்தல் உடன் நடத்த வேண்டும். இல்லை யேல் ஜனநாயகத்திற்கு அது பெரும் அச்சுறுத்தலாக அமையும்.
இதனால் ஜனநாயகமும் அபிவிருத்தியும் அதள பாதாளத்திற்கு தள்ளப்பட்டு விடும். சாதாரண சங்கம் என்றாலும் இடைக்கிடையே தேர்தல் நடத்தப்பட்டு புதியவர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். அதேபோன்றே மாகாண சபைகளுக்கு உரிய நேரத்தில் புதியவர்கள் தெரிவு செய்யப்பட வேண்டும்.
மாகாண சபைக்கு புதிய தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி தற்போதைக்கு ஐம்பது வீதம் விகிதாசார முறைமையில் இருந்தும் ஐம்பது வீதம் தொகுதி வாரி முறைமையில் இருந்தும் தெரிவு செய்யப்பட வேண்டும் என்பதே புதிய முறைமையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. எனினும் அதனை விட 60 வீதம் தொகுதி வாரியாகவும் 40 வீதம் விகிதாசார அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும் என பலர் கோருகின்றனர்.
இந்நிலையில் தற்போது எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் உள்ள நிலையில் அதனை பாராளுமன்றம் நிறைவேற்றி தந்தால் மாத்திரமே எனக்கு தேர் தலை நடத்த முடியும். ஐம்பதுக்கு ஐம்பதா அல்லது அறுபதுக்கு நாற்பதா என்ற தீர்மானத்தை பாராளுமன்றமே எடுக்க வேண்டும். அதுமாத்திரமின்றி தொகுதிகளின் எண்ணிக்கையை குறைப்பதனாலும் அதனையும் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும். இதற்கு அப்பால் பழைய முறைமையின் கீழ் தேர்தலை நடத்துவதாக இருந்தால் அதனையும் பாராளுமன்றமே தீர்மானிக்க வேண்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM