(இராஜதுரை ஹஷான்)
நாட்டுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தும் நோக்கம் தமிழ் மக்களுக்கு ஒருபோதும் கிடையாது. இனவாதங்களை ஒரு ஆயுதமாக கொண்ட சில அரசியல்வாதிகளே அரசாங்கத்திலும், சமூகத்திலும் பிரச்சினையை ஏற்படுத்தி வருகின்றனர் என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இனவாதங்களை ஒரு ஆயுதமாக கொண்ட சில அரசியல்வாதிகளே இன்று அரசாங்கத்திலும் சமூகத்திலும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக வடக்கு மாகாண முதலமைச்சர், வட மாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் போன்றோர் இனங்களுக்கிடையில் பிணக்கினை ஏற்படுத்தும் விதமாகவே செயற்பட்டு வருகின்றனர்.
இவ்வாறான அரசியல்வாதிகளே தமிழ் மக்களின் குறிப்பாக வடக்கு மக்களின் பிரதான நோக்கம் தனியாட்சி என்றும் பெரும்பான்மை மக்களுடன் அவர்களுக்கு ஒன்றிணைந்து வாழ முடியாது எனவும் தெரிவித்து அரசாங்கத்துக்கு தொடர்ந்து அழுத்தங்களை கொடுத்து வந்தனர். ஆனால் தமிழ் மக்கள் ஒன்றிணைந்த இலங்கையர்களாகவே வாழ விரும்புகின்றனர்.
விசுவமடு பிரதேசத்தின் இராணுவ அதிகாரி இடம்மாற்றம்பெற்று செல்லும் போது பெருந்தொகையான மக்கள் உணர்வு பூர்வமாக செயற்பட்டமை அனைவரது கவனத்தினையும் ஈர்த்துள்ளது. மக்களின் மனங்களை வென்ற ஒருவருக்கே இவ்வாறான அங்கீகாரம் கிடைக்கப்பெறும். இதுவே சிறந்த நல்லிணக்கத்துக்கான உதாரணம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM