பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நான்கு மணித்தியாலங்களாக பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்துவைத்திருந்த நபரிடமிருந்து பொதுமக்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
பாரிசின் வடபகுதியில் உள்ள பகுதியொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பொதுமக்களை பணயக்கைதிகளாக பிடித்த நபர் தன்னிடம் கைக்குண்டும் கைத்துப்பாக்கியும் உள்ளதாக தெரிவித்துள்ளார்
மேலும் தனக்கு ஈரான் தூதரகத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி தருமாறு அவர் கோரியுள்ளார்.
குறிப்பிட்ட கட்டிடத்திற்குள் உணவுவிநியோகிப்பவர் போல நுழைந்த நபர் அங்கிருந்தவர்களை தாக்கிய பின்னர் அவர்களை பணயக்கைதிகளாக பிடித்துள்ளார்.
அந்த நபரின் பிடியிலிருந்து கர்ப்பிணி பெண் ஒருவர் உட்பட சிலர் தப்பிச்சென்று அதிகாரிகளிற்கு தகவல்வழங்கியுள்ளனர்.
தகவல் கிடைத்ததும் காவல்துறையினர்; அந்த பகுதியை சுற்றிவளைத்துள்ளனர்.
இதற்கு சில மணிநேரத்தின் பின்னர் துப்பாக்கி பிரயோகம் எதனையும் மேற்கொள்ளாமல் காவல்துறையினர் அந்த நபரை கைதுசெய்துள்ளனர்.
இந்த சம்பவத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் தொடர்பில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM