(எம்.சி.நஜிமுதீன்)
தபால் சேவை ஊழியர்கள் நாடு தழுவிய ரீதியில் மேற்கொண்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ஐந்து இலட்சத்துக்கும் அதிகமான அஞ்சல்கள் குவிந்துள்ளதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் ஏற்பாட்டாளர் சிந்தக்க பண்டார தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2006 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட புதிய சுற்றறிக்கையின்படி தபால் சேவைக்கான பணியாளர்ளை சேர்த்துக் கொள்ளல், உப தபால் அதிகாரிகளை நியமித்தல் போன்வற்றில் முறையான நடைமுறைகள் பின்பற்றுதல், தபால் சேவையின் முதலாம் இரண்டாம் தர உத்தியோகத்தர்கள் தகுதி அடிப்படையில் இணைத்துக் கொள்ளல் மற்றும் சம்பளப் பிரச்சினை போன்ற பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தே தபால் சேவை ஊழியர்கள் நேற்று மாலை நான்கு மணியிலிருந்து பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுத்து வருகின்றனர்.
தபால் சேவை ஊழியர்களின் பணிப்பகிஷ்கரிப்பினால் தபாலகங்களில் அஞ்சல்கள் குவிந்துள்ளதுடன் வெளிநாட்டு அஞ்சல்கள் கொழும்பு மத்திய தபால் பரிமாற்று நிலையத்தில் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு தழுவிய ரீதியில் ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான அஞ்சல்கள் குவிந்துள்ளது எனக் குறிப்பிட்ட சிந்தக்க பண்டார, எமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM