இலங்கைக்கு எதிராக மேற்கிந்தியத்தீவுகளில் இடம்பெற்று வரும் மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 226 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது.
அந்த வகையில் கடந்த 6 ஆம் திகதி போர்ட் ஒவ் ஸ்பெயினில் ஆரம்பமானது. இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணித் தலைவர் ஜேசன் ஹோல்டர் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தார்.
அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணி தனது முதல் இன்னிங்ஸில் 154 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 414 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.
டாவ்ரிச் 125 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கமல் இருந்தார். இலங்கை அணி தரப்பில் லஹிரு குமார 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.
இதையடுத்து ஆடிய இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 55.4 ஓவர்களில் 185 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்க ளையும் இழந்தது.
தொடர்ந்து மேற்கிந்தியத் தீவுகள் அணி இரண்டாவது இன்னிங்ஸை ஆடியது. 72 ஓவர்களில் 7 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டத்தை நிறுத்திக் கொள்வதாக மே.இ.தீவுகள் அறிவித்தது.
இலங்கை அணி வெற்றி பெற 453 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தொடர்ந்து ஆடிய இலங்கை அணி நான்காவது நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட்டுக்கள் இழப்புக்கு 176 ஓட்டங்களை எடுத்திருந்தது. குசல் மெண்டிஸ் 94 ஓட்டங்களுடன் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்தார்.
இந் நிலையில் நேற்று ஐந்தாம் நாள் ஆட்டம் ஆர்பமான சிறிது நேரத்தில் குசல் மெண்டிஸ் சதம் அடித்து 102 ரன்களுடன் ஆட்டமிழந்தார். அதன் பின் வந்த ஏனயை வீரர்கள் சொற்ப ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இதனால் இலங்கை அணி 83.2 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 226 ரன்கள் எடுத்தது. மேற்கிந்திய அணி சார்பில் ரோஸ்டன் சேஸ் 4 விக்கெட்டுக்களையும்,தேவேந்திர பிஷு 3 விக்கெட்டுக்களையும் ஷானோன் காபிரியல் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து, 226 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனான ஷேன் டாவ்ரிச் தேர்வு செய்யப்பட்டார்.
இரு அணிகளுக்குமான இரண்டாவது டெஸ்ட் போட்டி எதிர்வரும் 14 ஆம் திகதி வியாழக்கிழமை ஆரம்பமாகவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM