(ப.பன்னீர்செல்வம்)
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அச்சுறுத்திப் பெறவில்லை. மஹிந்த ராஜபக்ஷ விரும்பியே வழங்கினார். இதற்கு சாட்சி முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ ஆவர் என அமைச்சர் நிமால் சிறிபால டிசில்வா தெரிவித்துள்ளார்.
நாங்கள் நபர்களில் தங்கியிருக்கவில்லை எமக்கு முக்கியம் கட்சியே ஆகும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஊவா மாகாண சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் இளைஞர் மாநாட்டில் உரையாற்றும் போதே போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சட்டபூர்வமாகவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரானார். ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஒரு நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு தனி வாகனத்தில் வந்தார். இதன் போது அங்கு மஹிந்த ராஜபக்ஷவும் இருந்தார் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலரும் அங்கிருந்தனர்.
பின்னர் மைத்திரி, மஹிந்த, சபாநாயகர் சமல் ராஜபக் ஆகியோர் இல்லத்தின் மேல் மாடிக்கு சென்று பேச்சுதவார்த்தைகளை நடத்திய பின்னரே கட்சி தலைமைப் பதவியை மஹிந்த மைத்திரிக்கு வழங்கினார்.
இதற்கு சாட்சி சபாநாயகர் சமல் ராஜபக் ஷ ஆவார். எவரும் அச்சுறுத்தல் விடுத்து கட்சித் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்படவில்லை.
அன்றைய தினம் மேல் மாடியிலிருந்து மைத்திரியும் மஹிந்தவும் சிரித்துக் கொண்டே கீழே இறங்கி வந்தனர்.
கீழே இறங்கி வந்த பின்னர் எமக்கு மத்தியில் மஹிந்த மைத்திரிக்கு தலைமைப் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறும் உத்தியோகத்தர்கள் குழுவை அமைக்குமாறும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM