ஜனாதிபதிக்கும் பிரதமருக்குமிடையில் முரண்படுகள் இல்லை - துமிந்த

Published By: Vishnu

11 Jun, 2018 | 08:29 AM
image

(ஆர்.யசி )

தேசிய அர­சாங்­கத்தில் பிர­தான இரண்டு கட்­சிகளுக்கிடையில் கருத்து முரண்­பா­டுகள் உள்­ளன. ஆனால் அவற்றை பேச்­சு­வார்த்­தைகள் மூல­மாக வெற்­றி­கொண்டு தேசிய அர­சாங்­கத்தை பலப்­ப­டுத்­தவே முயற்­சித்து வரு­கின்றோம். தேசிய அர­சாங்­கத்தில் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் முரண்­பா­டுகள் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சியின் தேசிய அமைப்­பாளர் அமைச்சர் துமிந்த திசா­நா­யக தெரி­வித்தார்.

தேசிய அர­சாங்­கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்­திர கட்சி வெளி­யேற வேண்டும் என தொடர்ச்­சி­யாக கட்­சியின் 16 பேர் கொண்ட சுயா­தீன அணி­யினர் தெரி­வித்து வரு­கின்ற நிலையில் அது குறித்து வின­விய போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறு­கையில், 

நாட்டின் பிர­தான பிரச்­சி­னை­களை வெற்றி கொள்­வதில் இன்று எமக்கு பாரிய சவால்கள் உள்­ளன. பிர­தான இரண்டு கட்­சி­களும் இணைந்தே இந்த சவால்­களை வெற்­றி­கொள்ள வேண்­டி­யுள்­ளது. எனினும் தேசிய அர­சாங்­கத்தில் குழப்­பங்கள் உள்­ள­தாக கூறும் கதைகள் அனைத்­தமே பொய்­யா­ன­வை­யாகும். பிர­த­மரும் ஜனா­தி­ப­தியும் முரண்­ப­டு­வ­தாக கூறி மக்­களை சிலர் குழப்பி வரு­கின்­றனர். எமது அணி­யிலும் சிலர் அவ்­வா­றான தவ­றான கருத்­துக்­களை முன்­வைத்து வரு­கின்­றனர். 

எனினும் ஜனா­தி­ப­திக்கும் பிர­த­ம­ருக்கும் இடையில் எந்த முரண்­பா­டு­களும் இல்லை. கருத்து கூறு­வதன் மூல­மாக சில தவ­று­களை சுட்­டிக்­காட்­டு­வதை  ஜனா­தி­பதி பிர­த­ம­ருடன் முரண்­ப­டு­கின்றார் என்ற அர்த்தம் கொள்­ளத்­தே­வை­யில்லை. தொடர்ந்தும் தேசிய அர­சாங்­க­மாக பய­ணிக்க இரு­வ­ருமே தயா­ராக உள்­ளனர். 

அதேபோல் ஸ்ரீலங்கா சுதந்­திர கட்­சி­யி­ன­ருக்கும் ஐக்­கிய தேசியக் கட்­சிக்கும் இடையில் கொள்கை ரீதி­யி­லான பிரச்­சி­னைகள் இருக்­கலாம். ஆனால் அவற்றை பேச்­சு­வார்த்­தைகள் மூல­மாக வெற்­றி­கொள்ள முடியும், அதேபோல் எமது கட்­சியில் உள்ள முரண்­பா­டு­க­ளையும் வெற்­றி­கொள்ள முடியும்.  உட­ன­டி­யாக தேசிய அர­சாங்­கத்தை கலைக்க முடி­யாது. ஜனா­தி­பதி ஒரு கட்­சியில் இருக்­கையில் நாம் கட்­சியை விட்டு வெளி­யேறி இறு­தியில் ஜனா­தி­ப­தியை நெருக்­க­டியில் தள்ள முடி­யாது. 

ஆகவே புரிந்­து­ணர்வு அடிப்­ப­டையில் பிர­தான இரண்டு கட்­சி­களும் இணைந்து பய­ணிக்க வேண்­டி­யுள்­ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02
news-image

கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கோழி இறைச்சி...

2024-04-18 17:43:51
news-image

மாளிகாகந்த நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சந்தேக...

2024-04-18 17:24:50