மலையகத்தில் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பலத்த காற்று வீசுகிறது. இந்த காற்று காரணமாக பல வீடுகளின் கூரைத் தகடுகள் காற்றினால் அள்ளுண்டு செல்லப்பட்டுள்ளன.
அந்தவகையில், அக்கரப்பத்தனை ஊட்டுவள்ளி தோட்டத்தில் மரம் ஒன்று முறிந்து வீழ்ந்ததில் அப்பகுதியிலுள்ள மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதுடன் மின் கம்பிகளும் அறுந்துள்ளன.
நேற்று இரவு 8 மணி முதல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் துண்டிப்பின் காரணமாக டயகம, மன்றாசி, ஹோல்புறுக், நாகசேனை, லிந்துலை, மெராயா ஆகிய பகுதிகளுக்கு மின்சாரம் இல்லாமையினால் பிரதேச மக்கள் பல்வேறுப்பட்ட இன்னல்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர்.
இதேவேளை, குறித்த ஊட்டுவள்ளி தோட்டப்பகுதியில் வீசிய கடும் காற்றினால் வீடு ஒன்றின் கூரைதகடுகள் அள்ளுண்டு போயுள்ளன. இதில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சேதமடைந்த வீட்டை திருத்தும் பணியை தோட்ட நிர்வாகம் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM