இலங்கையில் இடம்பெற்ற கிரிக்கெட் போட்டிகளின் போது ஆட்டநிர்ணய சதி இடம்பெற்றதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை செய்வதற்காக ஐசிசியின் விசாரணையாளர்கள் குழுவொன்று கொழும்பு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஐசிசி விசாரணையாளர்கள் அல்ஜசீராவின் வீடியோவில் காணப்பட்ட முன்னாள் வீரர்களை விசாரணை செய்யவுள்ளனர்.
அல் ஜசீரா வெளியிட்ட புலனாய்வு வீடியோவை தொடர்ந்து முன்னாள் வீரர்கள் சிலர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதனை தொடர்ந்து இலங்கை கிரிக்கெட் அவர்களை பயிற்றுவிப்பாளர்கள் பணியிலிருந்து நீக்கியுள்ளது..
காலி மைதான ஆடுகளம் இலங்கை அணிக்கு சாதகமான விதத்தில் தயாரிக்கப்ட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் இலங்கை கட்டுப்பாட்டுச்சபை சபையை நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன.
இதன் காரணமாக இந்த மைதானத்தில் இவ்வருடம் சர்வதேச போட்டிகள் இடம்பெறாது என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன
இதேவேளை இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் துபாயில் ஐசிசி அதிகாரிகளை சந்தித்துள்ளார்.
இந்த சூழ்நிலையிலேயே ஐசிசி விசாரணையாளர்கள் இலங்கை வந்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM