காத்தான்குடி பிரதேசத்தில் உணவு தயாரிக்கும் கடையொன்றில் சமைத்து விற்கப்பட்ட உணவு விஷமானதன் காரணமாக காத்தான்குடி ஆதார வைத்தியாசாலையில் அனுமதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நேற்று இரவு வரை 71 பேராக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், இதில் மேலதிக சிகிச்சைக்காக 3 பேர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காத்தான்குடி ஆதார வைத்தியசாலையின் அதிகாரி தெரிவித்தார்.
காத்தான்குடி கடற்கரை வீதியில் உள்ள இவ் உணவு நிலையத்தில் நேற்று முன் தினம் வழங்கப்பட்ட புரியாணி உணவு விஷமானதால் முதல் நாள் குழந்தைகள், பெரியோர்கள் உட்பட 57 பேர் காத்தான்குடி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
இதில் 7 பேர் இன்று காலை சிகிச்சை பெற்று வெளியேறியதோடு 50 பேர் தொடந்தும் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் நேற்று மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 11 வயது சிறுமி ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மாற்றப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் யு.எல்.நசிர்தீன் இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைக்காக, சோதனையின் போது பெறப்பட்ட உணவுகளை பரிசோதனை செய்வதற்காக இரு சுகாதார உத்தியோகத்தர்கள் அடங்கிய குழு ஒன்று இன்று காலை கொழும்பு நோக்கி பயணமானார்கள் என்று தெரிவித்தார்.
- ஜவ்பர்கான்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM