(ஆர்.யசி)
பல்கலைக்கழகங்களில் இடம்பெறுகின்ற போதைப் பொருள் பாவனை மன்றும் பாலியல் இலஞ்சம் கோரும் நிலைமைகளின் பின்னணியில் பாதாள உலக கோஷ்டிகள் மற்றும் அரசியல்வாதிகேள உள்ளனர் என உயர்கல்வி மற்றும் புத்தசாசன அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் ஜெனரல் சேர் ஜொன் கொத்தலாவலை பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் சைட்டம் மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான சட்டமூல திருத்த விவாதத்திலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இன்று நாட்டில் பரவி வரும்போதைப்பொருள் பாவனையால் இளம் சமூகம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகின்றது. வடக்கில் என்றும் இல்லாதா அளவில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது. வடக்கின் அரசியல் வாதிகள் பல காரணிகளை கூறி வருகின்றனர். ஆனால் வடக்கின் இளம் சமூகத்தின் பாதுகாப்பு குறித்து வடக்கின் இவர்கள் பேசுவதில்லை.
இன்று வடக்கில் மட்டுமல்ல, நாடில் சகல இடங்களிலும் போதைப் பொருள் பாவனை அதிகரித்து வருகின்றது. பல இடங்களின் போதைப்பொருள் பிடிபடுகின்றது, ஆனால் பிடிபட்ட நபர்களுக்கு என்ன நடந்தது, குடு போதைப்பொருள் எங்கே என்ற கேள்வி உள்ளது. இவை மிகவும் பாரதூரமான விடயமாகும். இன்று பல பல்கலைக்கழகங்களில் போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளது.
கடந்த காலங்களில் பல்கலைக்கழகத்தில் போதைப்பொருள் மற்றும் அதனுடன் கூடிய குற்றங்களாக 267 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. இந்த முறைப்பாடுகள் குறித்து விசாரணைகளை நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
பல்கலைக்கழகங்களில் அதிகரித்துள்ள போதைப் பொருள் காரணமாக சில மோசமான சம்பவங்களும் இடம்பெறுவதாக எமக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளது. பாலியல் இலஞ்சம் கோரி பெண் பிள்ளைகளை அச்சுறுத்துவதாக ஒரு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மீது தொடர்ச்சியாக முறைப்பாடு கிடைத்துள்ளது. அவர் குறித்து விரைவான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இவ்வாறான செயற்பாடுகளின் பின்னணியில் பாதாள உலக கோஷ்டிகளின் செயற்பாடும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுமே உள்ளது. ஆகவே போதைப்பொருள் கடத்தல், பாவனை மற்றும் பாதாள உலக செயற்பாடுகள் இரண்டும் ஒன்றுடன் ஒன்று இணைந்த செயற்பாடாகும். எனவே இவை இரண்டையும் ஒன்றாக கட்டுப்படுத்த வேண்டும் இதில் பொலிஸ் செயற்பாடுகள் முக்கியமானது.
பொலிஸ் சுயாதீனமாக இயங்க வேண்டும். ஆனால் அதில் கேள்வி உள்ளது, எனினும் இவற்றை கவனதில் கொண்டு செயற்பட வேண்டும். போதைப்பொருள் மற்றும் பாதாள உலக பரவல் அரசியல் வாதிகள் மற்றும் பொலிஸ் உயரதிகாரிகளின் முழுமையான தொடர்பிலேயே இயங்கி வருகின்றது.
பாதாள உலக கோஷ்டிகள் அரசியல் வாதிகளின் தயவு இல்லாது இவர்களால் செயற்பட முடியாது. பாரிய சம்பவங்கள் இடம்பெற்று குற்றவாளியாக கைதுசெய்யப்படும் நபர்கள் விரைவில் இலகுவாக விடுதலையாகி மீண்டும் அதே குழப்பங்களை செய்து வருகின்றனர். இதன் பின்னணி பலம்பொருந்தியதாக உள்ளது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM