ஈராக்கிய தலைநகர் பாக்தாத்தில் பள்ளிவாசலொன்றுக்கு அருகிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலையில் நேற்று முன்தினம் புதன்கிழமை பின்னிரவு இடம்பெற்ற இரட்டைக் குண்டு வெடிப்புச் சம்பவங்களில் குறைந்தது 17 பேர் பலியானதுடன் 35 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ஆயுதக் குழுவொன்றால் வீடொன்றில் அந்தக் களஞ்சியசாலை செயற்படுத்தப்பட்டு வந்ததாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் கூறினார்.
அங்கு ஏவுகணைகள் மூலம் ஏவப்படும் குண்டுகள் மற்றும் ஷெல் குண்டுகள் உட்பட கனரக ஆயுதங்கள் வைக்கப்பட்டிருந்ததாக அவர் தெரிவித்தார்.
உயிரிழந்தவர்களில் சிறுவர்களும் பெண்களும் உள்ளடங்குவதாக மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகின்றன.
ஷியா இனத்தவர்களை பெரும்பான்மையாகக் கொண்ட சாட்ர் நகரில் இடம்பெற்ற இந்தப் பாரிய குண்டு வெடிப்புகளால் அந்த ஆயுதக் களஞ்சியசாலை மற்றும் அதற்கு அருகிலிருந்த பள்ளிவாசல் மற்றும் கட்டடங்களும் வாகனங்களும் கடும் சேதத்திற்குள்ளாகியுள்ளன.
இந்நிலையில் இந்த வெடிப்பு சம்பவம் குறித்து பிராந்திய அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேற்படி பள்ளிவாசலுக்கு ஷியா மதகுருவான முக்தாடா அல் சாட்ரின் ஆதரவாளர்கள் அடிக்கடி விஜயம் செய்து வருவது வழமையாகவுள்ளது. கடந்த மே மாதம் 12 ஆம் திகதி இடம்பெற்ற தேர்தலில் முக்தாடா அல் சாட்ரின் செய்ரூன் கூட்டமைப்பு மொத்தம் 54 ஆசனங்களை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்த மேற்படி வெடிப்புச் சம்பவம் இடம்பெறுவதற்கு முன்னர் மேற்படி தேர்தலிலான வாக்குகளை மீள முழுமையாக எண்ணுவதற்கு ஆதரவாக பாராளுமன்றம் வாக்களித்திருந்தது.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்தத் தேர்தலை கண்காணிப்பதில் ஈடுபட்ட சுயாதீன தேர்தல் ஆணையகத்தைச் சேர்ந்த 9 உறுப்பினர்களைப் பணிநீக்கம் செய்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM