மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 9ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மன்னார் நகரப் பகுதியில் சதொச விற்பனை நிலைய கட்டுமான பணியின்போது கண்டு பிடிக்கப்பட்ட மனித எச்சங்களை தொடர்ந்து மேலும் எச்சங்கள் உண்டா என்பதை நோக்காகக் கொண்டு இன்றும் தொடர்ந்து ஒன்பதாவது நாட்களாக அகழ்வு பணி இடம்பெற்றது.
மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஆ.கி.அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மன்னார் மாவட்ட சட்ட வைத்திய அதிகாரி டபிள்யூ.ஆர்.ஏ.எஸ்.ராஐபக்ஷ தலைமையில் இவ் பணி தொடர்கின்றது.
இன்றைய தினம் ஏற்கெனவே அகழ்வு செய்யப்படுவதற்காக அளவு செய்யப்பட்ட நிலத்திலேயே சுமார் நான்கு அடி தொடக்கம் ஆறு அடி வரையான ஆழமான நிலத்தை அகழ்வு செய்யப்பட்டது.
பெரும்பாலும் நான்கு அடிக்கு கீழேயே மனித எச்சங்கள் தென்பட்டு வருவதால் இன்றைய அகழ்வின்போது பெரும்பாலும் எச்சங்கள் தென்பட்டதாக தெரியவில்லை. இருந்தும் குறிப்பிட்ட தூரம் வரை இந்த அகழ்வு பணியை மேற்கொள்ளப்பட்டு வருவதையும் காணக்கூடியதாக இருக்கின்றது.
இத்துடன் குழிக்குள் ஏற்கெனவே கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புக்கூடுகளின் பகுதிகளை குழியிலிருந்து வெளியில் எடுப்பதற்காக துப்பரவு செய்யும் பணியும் தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM