ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்துவதற்காக கட்சியை விட்டு தான் முதலில் வெளியேறவில்லை. கட்சியின் தோல்விக்கும் பிளவுகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முற்று முழுவதுமான காரணம் என முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்தார்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் ஊடகங்களுக்கு விடுக்கப்படுகின்ற அச்சுறுத்தல் தொடர்பில் ஊடகங்கள் அமைதி காத்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்.
கடந்த ஆட்சியின் தேர்தல் பிரசார நடவடிக்கையின் போது அரச தொலைக்காட்சி ஒன்றை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்க பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன்னாள் ஜனாதிபதியும் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய மஹிந்த ராஜபக் ஷ வருகை தந்திருந்த போதே அங்கு கூடியிருந்த ஊடகவியலாளர்களினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு மேற்கண்டவாறு பதிலளித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்து கருத்து வெளியிட்ட மஹிந்த ராஜபக் ஷ,
தேசிய அரசாங்கத்தின் கீழ் அங்கத்துவம் பெறும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினை சேர்ந்த சில உறுப்பினர்கள் இன்று கட்சியை நான் பிளவுப்படுத்துவதாக தெரிவிக்கின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிளவுபடுத்துவதற்காக கட்சியை விட்டு நான் முதலில் வெளியேறவில்லை. கட்சியின் தோல்விக்கும் பிளவுகளுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே முற்று முழுவதுமான காரணம்.
இன்று எனது தலைமைத்துவத்தின் கீழ் கட்சி ஒன்றை உருவாக்குவது தொடர்பில் பரவலாக பேசப்படுவதோடு இது தொடர்பில் என் மீது பாரதூரமான குற்றச்சாட்டுகளும் சுமத்தப்படுகின்றன. புதிய கட்சியொன்றை உருவாக்குவது தொடர்பில் நான் எவ்வித செயற்பாடுகளையும் முன்னெடுக்கவில்லை.
நல்லாட்சி அரசின் செயற்பாடுகள் மீது மக்கள் அதிருப்தி கொண்டுள்ள நிலையில் மக்களே அதற்கான அடித்தளத்தை அமைக்கின்றனர். அதை நான் அவதானித்துக் கொண்டிருக்கின்றேன். இதற்கான இறுதி பதிலை மக்களே வெகுவிரைவில் வழங்குவார்கள்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியானது மக்களினது கட்சியாகும் மக்கள் இருக்கும் இடத்திலேயே கட்சியானது இருக்கின்றது. வெறுமனே கட்சியின் பெயர் பதாகைகள் இருக்கும் இடத்தில் கட்சியில்லை என்ப தனை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
நல்லாட்சி அரசாங்கத்தினால் தொடர்ச்சியாக விடுக்கப்படும் ஊடக அச்சுநுத்தல்கள் தொடர்பில் ஊடகங்கள் அனைத்துமே மௌனம் காக்கின்றன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM