(இரோஷா வேலு)
ஹெரோயின் போதைப்பொருளுடன் நேற்று பொரள்ளை பிரதேசத்தில் வைத்து கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பொரள்ளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிறிசர உயன பிரதேசத்தில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்ணொருவர் நேற்றுமுன்தினம் மதிய வேளையில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் சிறிசர உயன பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரை கைதுசெய்யும் வேளையில் அவரிடமிருந்து 4 கிராம் 120 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சந்தேகநபரை கைதுசெய்த பொலிஸார் அவரை நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM