அரசியல் வங்குரோத்து காரணமாகவே சி.வி இனவாதத்தை தூண்டுகின்றார்

Published By: Rajeeban

07 Jun, 2018 | 10:26 AM
image

(எம்.ஆர்.எம்.வஸீம்)

வடக்கு முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் அர­சியல் வங்­கு­ரோத்து நிலையை அடைந்­து­வ­ரு­கின்றார். அதில் இருந்து மீள்­வ­தற்கே இன­வா­தத்தை தூண்­டும்­வ­கை­யி­லான பிர­சா­ரங்­களை மேற்­கொள்­கிறார் என அமைச்­சரும் அமைச்­ச­ரவை இணைப்­பேச்­சா­ள­ரு­மான ராஜித சேனா­ரத்ன தெரி­வித்தார்.

அமைச்­ச­ரவை தீர்­மா­னங்­களை அறி­விக்கும் செய்­தி­யாளர் சந்­திப்பு நேற்று அர­சாங்க தகவல் திணைக்­க­ளத்தில் இடம்­பெற்­றது. இதில் ஊட­க­வி­ய­லாளர் ஒரு­வ­ரினால் கேட்­கப்­பட்ட கேள்­வி­யொன்றுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே  அமைச்­ச­ரவை பேச்­சாளர் இவ்­வாறு குறிப்­பிட்டார். 

அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில்,

வட­மா­காண முத­ல­மைச்­சரின் பேச்சு அர­சாங்­கத்தின் கொள்­கைக்கு மாத்­தி­ர­மல்ல தமிழ் தேசிய கூட்­ட­மைப்பின் கொள்­கைக்கும் விரோ­த­மா­ன­தாகும்.

அர­சியல் வங்­கு­ரோத்து நிலையை அடையும் அனைத்து அர­சி­யல்­வா­தி­களும் இறு­தி­யாக மத, இன­வா­தத்­தையே தூக்­கிப்­பி­டிப்­பார்கள். அவ்­வாறே சீ.வி. விக்­கி­னேஸ்­வ­ரனும் தற்­போது இன­வா­தத்தை தூண்­டும்­வ­கையில் பிர­சா­ரங்­களை நடத்­தி­வ­ரு­கின்றார். இந்­தி­யாவில் இந்த நிலை இல்லை. அங்கு அனைத்து இனங்­க­ளுக்கும் சம அந்­தஸ்து வழங்க நேரு பிர­த­ம­ராக இருக்கும் போதே பிர­சா­ரம்­செய்து வந்தார், எமது நாட்டில் அது இடம்­பெ­ற­வில்லை.

கேள்வி விக்­கி­னேஸ்­வரன், சிவா­ஜி­லிங்கம் ஆகி­யோரின் பேச்­சுக்கள் வடக்கில் இளை­ஞர்­களை மீண்டும் யுத்­தத்­துக்கு தூண்­டும்­வ­கையில் இருக்­கின்­ற­னவே?

பதில் இவர்கள் என்­னதான் தெரி­வித்­தாலும் பயங்­க­ரவாதம் தற்­போது முடி­வ­டைந்­துள்­ளது.

 கேள்வி இவர்­களின் வாயை அடைக்க அர­சாங்­கத்­துக்கு முடி­யாதா?

பதில் வாய்­களை அடைத்து இதனை தடுக்க முடி­யு­மாக இருந்தால் இன்னும் பல­ரது வாய்­களை அடைக்­க­வேண்டும். அதற்­கா­கத்தான் இன­வாத்தை தூண்டுபவர்களுக்கு எதிரான சட்டமூலத்தை நாங்கள் கொண்டுவர முயற்சித்தோம். ஆனால் அதனை கொண்டுவர இடமளிக்கவில்லை. இன,மதவாங்களை தூண்டுவதை தடுப்பதாக இருந்தால் அந்த சட்டமூலத்தை கொண்டுவரவேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33