"அர்ஜுன் மகேந்திரனை கண்டுபிடித்து தரவும்"

Published By: Vishnu

06 Jun, 2018 | 06:47 PM
image

(இராஜதுரை ஹஷான்)

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர்  அர்ஜுன மகேந்திரன் கடந்த மூன்று வருட காலமாக காணாமல் போயுள்ளார். ஆகவே அவரை கண்டுப்பிடித்து தருமாறு காணாமல் போனோர் அலுவலகத்திற்கு பிவிதுரு ஹெலஉருமய அமைப்பின் செயலாளர் சுஹிஸ்வர பண்டார மனு தாக்கல் செய்துள்ளார்.

இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் பல பில்லியன் நிதியினை மோசடி செய்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கடந்த மூன்று வருட காலமாக காணமல் போயுள்ளார். தேசிய அரசாங்கமும் இவ்விடயம் தொடர்பில் மந்தகரமாகவே  செயற்பட்டு வருகின்றது. அர்ஜுன் மகேந்திரனை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.

மோசடி  செய்யப்பட்ட நிதியினை மீள பெறுவது தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்ட விடயங்கள் இதுவரை காலமும் செயற்படுத்தவில்லை. குறித்த மோசடியின் காரணமாக அனைத்து துறைகளும் தற்போது பாதிக்கப்பட்ட நிலையிலே உள்ளது. அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய சிவப்பு  அறிக்கை விடுக்கப்பட்டபோதும் இதுவரை காலமும் அதற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.

அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரும் நோக்கம் தேசிய அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது. ஒரு வேளை அவர் நாட்டுக்கு வந்தால் அது பிரதமருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் இதன் காரணமாகவே இவர்கள் அவரை பாதுகாக்கின்றனர். 

ஆகவே இவரை காணாமல் போனோர் பட்டியலில் இணைத்து கண்டுப்பிடித்து தருமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08