(இராஜதுரை ஹஷான்)
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கடந்த மூன்று வருட காலமாக காணாமல் போயுள்ளார். ஆகவே அவரை கண்டுப்பிடித்து தருமாறு காணாமல் போனோர் அலுவலகத்திற்கு பிவிதுரு ஹெலஉருமய அமைப்பின் செயலாளர் சுஹிஸ்வர பண்டார மனு தாக்கல் செய்துள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
மத்திய வங்கியின் பிணைமுறி கொடுக்கல் வாங்கலில் பல பில்லியன் நிதியினை மோசடி செய்த மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் கடந்த மூன்று வருட காலமாக காணமல் போயுள்ளார். தேசிய அரசாங்கமும் இவ்விடயம் தொடர்பில் மந்தகரமாகவே செயற்பட்டு வருகின்றது. அர்ஜுன் மகேந்திரனை பாதுகாப்பதே அரசாங்கத்தின் பிரதான நோக்கமாக காணப்படுகின்றது.
மோசடி செய்யப்பட்ட நிதியினை மீள பெறுவது தொடர்பில் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு குறிப்பிட்ட விடயங்கள் இதுவரை காலமும் செயற்படுத்தவில்லை. குறித்த மோசடியின் காரணமாக அனைத்து துறைகளும் தற்போது பாதிக்கப்பட்ட நிலையிலே உள்ளது. அர்ஜுன மகேந்திரனை கைதுசெய்ய சிவப்பு அறிக்கை விடுக்கப்பட்டபோதும் இதுவரை காலமும் அதற்கான எவ்வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
அர்ஜுன மகேந்திரனை மீண்டும் நாட்டுக்கு கொண்டுவரும் நோக்கம் தேசிய அரசாங்கத்திற்கு ஒருபோதும் கிடையாது. ஒரு வேளை அவர் நாட்டுக்கு வந்தால் அது பிரதமருக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் இதன் காரணமாகவே இவர்கள் அவரை பாதுகாக்கின்றனர்.
ஆகவே இவரை காணாமல் போனோர் பட்டியலில் இணைத்து கண்டுப்பிடித்து தருமாறு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM