(இராஜதுரை ஹஷான் , கே.லாவண்யா)
சீன அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் விசேட பொருளாதார வலயமொன்றை ஹம்பாந்தோட்டையில் ஸ்தாபிப்பதற்காக திட்டமிடப்பட்டுள்ளதுடன், அதற்காக சீன அரசாங்கத்தின் மூலம் வைனா இன்ஜினியரின் கோபரேஷன் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளது.
இதன் கீழ் ஹம்பாந்தோட்டை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் இலங்கை மற்றும் சீனா வழங்கல் மற்றும் கைத்தொழில் வலயங்களை ஸ்தாபிப்பதற்கு உரிய நடவடிக்கைகளை 03 கட்டங்களின் கீழ் மேற்கொள்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தினை மிகவும் திட்டமிடப்பட்ட நகர அபிவிருத்தி நடவடிக்கைகள் இடம்பெறுவதனை உறுதி செய்வதற்காக ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்காக பிரதான திட்டமொன்றை தயாரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதற்காக ஆலோசனை சேவை நிறுவனமொன்றை நியமித்து கொள்வதற்கும், அவ்வேலைத்திட்டத்தினை ஒருங்கிணைப்பு செய்யும் பணியினை வேலைத்திட்ட முகாமைத்துவ பிரிவொன்றை நியமிப்பதற்கும் மற்றும் அதற்கு அவசியமான வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்குமாக இளைஞர் விவகார, வேலைத்திட்ட முகாமைத்துவம் மற்றும் தென் அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயக்கவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM