(ரி.விரூஷன்)
மத்திய மற்றும் கிழக்கு மாகாண கணக்கீட்டு பாட ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் இடம்பெறவுள்ளதாக தேசிய கல்வி நிறுவகத்தின் கணக்கீட்டு பாட திட்டத்தின் தேசிய செயற்திட்ட தலைவர் பிரபாகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,
"மத்திய மாகாணத்தை சேர்ந்த தமிழ் மொழி மூலமான கா.பொ.த உயர்தர கணக்கீட்டு பாட ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் சேவைக்கால ஆலோசகர்களுக்குமான செயலமர்வுகளானது இம் மாதம் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் 12ஆம், 13ஆம் திகதிகளில் காலை 8.30 மணி தொடக்கம் ஹட்டன் சீதா நிறுவனத்தில் இடம்பெறவுள்ளது. இச் செயலமர்வு தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல்கள் மத்திய மாகாண வலய கல்வி திணைக்களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இதே போன்று கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த கா.பொ.த உயர் தர கணக்கீட்டு பாட ஆசிரியர்களுக்கும், ஆசிரியர் சேவைக் கால ஆலோசகர்களுக்குமான செயலமர்வுகள் இம் மாதம் 19ஆம், 20ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது.
அத்துடன் கா.பொ.த சாதாரண தர வணிகக்கல்வி ஆசிரியர்களுக்குமான செயலமர்வுகள் இம் மாதம் 21ஆம் திகதியும் இடம்பெறவுள்ளன. இச் செயலமர்வுகளானது மட்டகளப்பு கல்வி வலயத்தில் இடம்பெறவுள்ளதுடன் இவை தொடர்பான உத்தியோகபூர்வ அறிவுப்புக்களை மாகாண கல்வி திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது." என தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM