"அல்பிரேட் துரையப்பா முதல் இன்று வரை பல துரோக கும்பல்கள் எங்கள் இனத்தின் மக்களை நசுக்கிவருகின்றனர். இவ்வாறான அடக்குமுறைக்கு எதிராக முதலாவதாக தற்துணிவாக எதிர்த்து போரடி தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு அடித்தளமிட்ட முதற் தற்கொடையாளி பொன். சிவகுமாரன். எனவே தமிழர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துகின்ற இன்றுள்ள துரோக கூட்டங்கள் இனத்திற்காக இப்படிப்பட்ட புனிதர்கள் செய்த தியாகங்கள் போராட்டங்களை படித்துப் பார்க்கவேண்டும்." என தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டு இணைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தெரிவித்தார்.
நேற்று மாலை மட்டக்களப்பு தாமரைக்கேணியிலுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அலுவலகத்தில் இடம்பெற்ற தமிழ் தேசிய விடுதலைக்காக தன்னைத் தியாகம் செய்த பொன். சிவகுமாரின் 44 ஆவது நினைவேந்தலில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே தர்மலிங்கம் சுரேஸ் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நினைவேந்தலில் தர்மலிங்கம் சுரேஸ்,
"தமிழ் மக்கள் மீது முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட சிங்கள பேரினவாதத்தின் அடக்குமுறைக்கு எதிராக தற்துணிவாக பல போராட்டங்கள் நடாத்தி தமிழினத்திற்காக தன்னுடைய உயிரை தியாகம் செய்த ஒரு மாவீரன்
1970 சிறிமாவோ பண்டார நாயக்காவின் அரசினால் கல்வி தராதரம் பார்க்கப்பட்டு தமிழ் மக்களுக்கு மிகவும் ஒரு புறம்பான கல்வி தரம் நடைபெற்றது அது தமிழ் மக்கள் மீது முதலாவதாக மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறை அந்த நிலைமையில் பொன்.சிவகுமாரன் தனது முழு எதிர்பபையும் வெளிப்படுத்தி கல்விக்காக உண்ணதமான போராட்டத்தை மேற்கொண்டார்.
அப்போது பொலிஸார் பல்வேறு இன்னல்களை கொடுத்தும் அதனை முறியடித்து பல தற் துணிவான போராட்டங்களை செய்து தமிழ் மக்களின் விடியலுக்காக ஆயுதம் ஏந்தியவர். இதன்போது பல தமிழ் துரோக கும்பல்கள் ஆரம்பத்தில் இருந்தே சிங்கள அரசுடன் சேர்ந்து தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை மழுங்கடிக்கின்ற பல செயற்பாடுகளில் ஈடுபட்டபோது அவ்வப்போது பல எதிர்ப்புக்களையும் இந்த அரசுக்கு தலையிடியை கொடுத்துவந்தார்.
இந்த நிலையில் பொன். சிவகுமாரன் பல இடங்களில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து பல துன்பங்களை அனுபவித்தும் கூட விடுதலையாகிய பின்பு இனத்திற்காக தியாகங்களை செய்ததுமட்டுமன்றி பொலிஸார் கைது செய்தபோது தன்னிடம் இருந்து எந்த உண்மையும் எடுக்ககூடாது என சயனைற் அருந்தி தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
அப்படிப்பட்ட ஒரு பெரும் மகாணை நினைவு கூறுவது இன்றியமையாததொன்று. எனவே அவரின் வரலாறு என்பது மிகவும் முக்கியமானது அண்ணன் திலீபன் போல சிவகுமாரன் எந்த நிலையிலும் சோரம் போகாத கொள்கையைக் கொண்டவர். அவரின் தியாகங்களை இன்றைய இளைஞர்கள் படிக்கவேண்டும்." என்றார்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM