(எம்.எப்.எம்.பஸீர்)
ரி.என்.எல். தொலைக்காட்சியின் பொல்கஹவலை ஒளிபரப்பு நிலையத்துக்கு தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவினரால் நேற்று "சீல்" வைக்கப்பட்டது.
குறித்த தொலைக்காட்சி சேவையானது பொல்கஹவலையிலிருந்து ஒளிபரப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்க தொலைத்தொடர்புகள் ஆணைக்குழுவிடமிருந்து வருடாந்தம் பெற்றுக்கொள்ள வேண்டிய அனுமதிப்பத்திரத்தை இதுவரை பெற்றுக்கொள்ளாமையே இவ் வாறு சீல் வைப்பதற்கு காரணம் என தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொல்கஹவலை நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து நேற்று மாலை குறித்த ஒளிபரப்பு நிலையத்தைச் சுற்றி வளைத்து அங்கிருந்த ஒளிபரப்பு உபகரணங்கள் பலவற்றை கைப்பற்றியதாக அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார்.
அனுமதிப் பத்திரமின்றி நிலையான இவ்வாறான ஒளிபரப்பு உபகரணங்களை பயன்படுத்துவது, 1991 ஆம் ஆண்டின் 25 ஆம் இலக்க தொலைத்தொடர்புகள் சட்டத்துக்கு 1996 ஆம் ஆண்டின் 27 ஆம் இலக்க திருத்தச் சட்டம் ஊடாக கொண்டுவரப்பட்ட திருத்தத்தின் பிரகாரம் தண்டனைக்குரிய குற்றம் எனவும் அதன் பிரகாரமே தொலைக்காட்சி ஒளிபரப்பு நிலையத்துக்கு "சீல்" வைத்ததாகவும் அந்த அதிகாரி மேலும் தெரிவித்தார். இந் நிலையில் குறித்த தொலைக்காட்சியின் மேல், வடமேல், சப்ரகமுவ உள்ளிட்ட பல பகுதிகளில் ஒளிபரப்பு நடவடிக்கைகளுக்கு தடங்கல் ஏற்பட்டுள்ளதாக அந்த தொலைக்காட்சி அலைவரிசையின் தலைவர் ஷான் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். பழமையான தனது தொலைக்காட்சிக்கு இவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இதற்கு முன்னர் ஒரு போதும் இருந்ததில்லை எனவும் அரசுக்கு செலுத்த வேண்டிய அனைத்துக் கட்டணங்களும் செலுத்தப்பட்டுள்ள நிலையில் இவ்வாறு "சீல்" வைத்தமை அசாதாரணமானது எனவும் ஷான் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM